Archives: அக்டோபர் 2019

தெருப் பணியாளர்களோடு சேர்ந்து கொள்

சான் பிரான்ஸிஸ்கோ நகரின் சுகாதார பணியாளர்கள், போதை மருந்துக்கு அடிமையாகி, வீடற்று, தெருக்களில் வசிப்போருக்கு, மருத்துவ உதவியளித்து அவர்கள், தங்கள் போதை பழக்கத்திலிருந்து விடுபட உதவினர். வீடற்றோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இது ஆரம்பிக்கப்பட்டது. சாதாரணமாக நோயாளிகளைச் சந்திக்கும்படி, மருத்துவர்கள், தங்கள் மருத்துவ மனையில் காத்திருப்பர். ஆனால் இங்கு, நோயாளிகள் மருத்துவரைத் தேடிச் செல்லத் தேவையில்லை, அவரைச் சந்திக்கும் நேரத்தை ஏற்கனவே பெற்றிருக்க வேண்டிய அவசியமுமில்லை. மருத்துவ உதவி, பாதிக்கப்பட்டவர்களைத் தேடி வரும். 

இந்த சுகாதார பணியாளர்கள், விருப்பத்தோடு பாதிக்கப்பட்டவர்களைத் தேடி வரும் காட்சி, இயேசு கிறிஸ்துவும் நம்முடைய தேவைகளில் நம்மைத் தேடி வந்ததை நினைவுப்படுத்துகின்றது. அந்நாட்களில் மதத் தலைவர்கள் யாரைப் புறக்கணித்தார்களோ, அவர்களையே, இயேசு தம் பணிக்காலத்தில் தேடி வந்தார், “அவர் ஆயக்காரரோடும், பாவிகளோடும்’’ உணவருந்தினார், (வச. 16) அவர் ஏன் இப்படிச் செய்கிறாரெனக் கேட்டபோது, “பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ள வர்களுக்கு வேண்டியதில்லை” என்றார். (வச. 17) மேலும் அவர், நீதிமான் களையல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன், என்றார்

நாம் சுகவீனராக, நமக்கொரு மருத்துவர் தேவையென உணரும்போது, (ரோம. 3:10) இயேசு விருப்பத்தோடு “ஆயக்காரோடும், பாவிகளோடும்” போஜனம் பண்ணினதையும், அவர் நம்மையும் சந்திக்க ஆர்வமாயிருப்பதையும் ஏற்றுக்கொள்வோம். அந்த சான் பிரான்சிஸ்கோ நகரின் சுகாதாரப் பணியாளர்களைப் போன்று, தேவன் நம்மையும் தெரு பணியாளர்களாக நியமித்துள்ளார். நாம், அவர் தரும் மீட்பின் செய்தியை தேவையிருப்போருக்கு எடுத்துச்செல்வோம்.

 

கிருபையின் விதைகள்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, நம்தேசசத்தில் ஒரு மனிதன் கடினமாக உழைத்து, வறண்டு, வெடித்துக் கிடந்த, பயனற்ற ஒரு நிலத்தை செழிப்பான இடமாக மாற்றினார். நதியால் சூழப்பட்ட அந்த இடம், நில அரிப்பாலும், சுற்றுச்சூழலின் பாதிப்பாலும், அழிக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்ட அம்மனிதன், அதனை நேசித்து, அதில் மரங்களை நட ஆரம்பித்தான். ஒரு முறை மூங்கில், அடுத்து பருத்தி என மாற்றி மாற்றி பயிரிட்டான். இப்பொழுது, அடர்ந்த காடும், நிறைய காட்டு உயிரினங்களும் 1,300 ஏக்கர் நிலத்தை நிரப்பியுள்ளன. அந்த நிலத்திற்கு கிடைத்த இந்த மறுவாழ்வு தன்னால் நடந்ததல்ல என்று அம்மனிதன் வலியுறுத்திக் கூறுகின்றான். அற்புதமாக வடிவமைக்கப்பட்ட இவ்வுலகில், எத்தனை அற்புதமாக விதைகள் காற்றில் சுமந்து செல்லப்பட்டு, விளை நிலங்களில் விதைக்கப்படுகின்றன, பறவைகளும், விலங்குகளும் விதைத்தலில் பங்கு பெறுகின்றன, மரங்களும், செடிகளும் செழித்து வளர நதிகள் தங்கள் உதவியைச் செய்கின்றன என்று அம்மனிதன் வியந்து கூறுகின்றான்.

படைப்பு நடைபெறும் விதத்தை நம்மால் கிரகிக்கவும், கட்டுப் படுத்தவும் முடியாது. தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்த காரியங்களும் இதே போன்றது என்று இயேசு கூறுகின்றார். “தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து, இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாத விதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது” என்றார். (மாற். 4:26-27) இவ்வுலகிற்கு வாழ்வையும், சுகத்தையும் தேவன் ஈவாகக் கொடுத்துள்ளார், இது நம்முடைய கரத்தின் திறமையினால் கிடைப்பதல்ல. தேவன் நம்மிடம் எதை சொல்கின்றாரோ அதை நாம் செய்யும் போது நம்முடைய வாழ்வு துளிர்க்கும். அவருடைய கிருபையினாலேயே எல்லாம் கிடைக்கின்றன.

ஒருவருடைய இருதயத்தை மாற்றியது நான் தான் என நினைக்கும்படி நமக்குத் தோன்றலாம், அல்லது நம்முடைய உண்மையான முயற்சியால் அது நடைபெற்றது என்று எண்ணலாம், நம்மை பலமுறை சோர்வடையச் செய்யும் அத்தகைய எண்ணம் தேவையில்லை. எல்லாவற்றையும் விளையச் செய்கிறவர் அவரே. எல்லாம் அவருடைய கிருபை.

 

ஒன்றாகப் பின்னப்பட்டது

தன்னுடைய வீட்டில், சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வளர்த்த செடியை, என் சிநேகிதி என்னிடம் கொடுத்தாள். அந்தச் செடி என்னுடைய உயரத்திற்கு இருந்தது. அதில் மூன்று நீண்ட, மெல்லிய கிளைகளிலிருந்து பெரிய இலைகள் வளர்ந்திருந்தன. அந்த இலைகளின் சுமையைத் தாங்க முடியாத அந்த கிளைகள் தரையை நோக்கி வளைந்து காணப்பட்டன. அந்த கிளைகளை நேராக்க, நான் அந்த தொட்டியின் அடிப்பக்கம் ஒரு கட்டையை தாங்கியாகக் கொடுத்து, அச்செடியின் மீது சூரிய வெளிச்சம் படும் படி ஜன்னலின் அருகில் வைத்தேன். சூரிய வெளிச்சம் பட்டு, இலைகளும், வளைந்த கிளையும் நேராக வளர்ந்து அதன் மோசமான நிலையை மாற்ற முயற்சித்தேன் .

இந்தச் செடியைப் பெற்ற சில நாட்களில், இதே போன்ற மற்றொரு செடியை அருகிலுள்ள ஒரு அலுவலகத்தின் முன் அறையில் பார்த்தேன். அதுவும் மூன்று மெல்லிய கிளைகளிலிருந்து வளர்ந்திருந்தது. ஆனால், அக்கிளைகள் மூன்றும் பின்னப்பட்டு, பெரிய ,உறுதியான கொப்பாக செயல்பட்டது. எந்த உதவியுமின்றி இச்செடி நேராக நின்றது.

ஒரே தொட்டியில் வைக்கப்பட்ட இரு செடிகள், அநேக ஆண்டுகளாக இருந்தும் அவை தனித்தனியே வளர்ந்து வந்தால், தேவன் அவர்கள் மகிழ்ந்திருக்கும் படி கொடுக்கும் நன்மைகளில் சிலவற்றை மட்டுமே அவர்களால் அநுபவிக்கமுடியும். ஆனால், அவர்களுடைய வாழ்வு தேவனோடு பின்னப்படும் போது, அதிக உறுதியையும், நெருங்கியிருத்தலையும் பெற்றுக்கொள்வர். அவர்களுடைய வாழ்வு உறுதியாக வளரும். முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது (பிர. 4:12).

வீட்டில் வளரும் செடியைப் போன்று, திருமணங்களையும், நட்புறவுகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. இந்த உறவுகள் பரிசுத்த ஆவியானவரைத் தங்களோடு இணைத்துக் கொண்டு வாழும்போது, தேவன் அவர்களின் பிணைப்பின் மையத்தில் இருப்பார். அன்பையும், கிருபையையும் முடிவில்லாமல் வழங்கும் அவர், நாம் ஒருவரோடொருவர் இணைந்து

 

ஒரே ஒரு தொடுதல்

ஒரு சாதாரண தொடுதல் தான். ஆனால், அது காலினின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது இயேசுவின் விசுவாசிகளுக்கு அதிக எதிர்ப்பைத் தெரிவிக்கும் பகுதிக்குச் சென்று, தொண்டு செய்யும்படி அவனுடைய குழுவினர் ஆயத்தப்படுகையில், அவனுடைய மன அழுத்தம் வெகுவாக அதிகரித்தது. அவன் தன் கவலைகளை, அக்குழுவிலுள்ள ஒருவரோடு பகிர்ந்தான். அந்த நண்பன் நின்று, தன் கையை அவன் தோள் மீது வைத்து, அவனை ஊக்கப்படுத்தும் சில வார்தைகளைப் பகிர்ந்து கொண்டான். காலின் ,அந்த தொடுதலை, தன் வாழ்வின் திருப்பு முனையாக நினைத்துப் பார்க்கின்றான். தேவன் அவனோடு இருக்கிறார் என்ற உண்மை வல்லமையாக அவனுக்குள் கிரியை செய்தது.

இயேசுவுக்கு மிக அன்பான சீடனான யோவான், சுவிசேஷத்தைப் பரப்பியதற்காக நாடு கடத்தப்பட்டு, பத்மு தீவில் தனித்து விடப்பட்டான். அப்பொழுது அவன், “எக்காளசத்தம் போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக்” கேட்டான் (வெளி. 1:10). அதனைத் தொடர்ந்து தேவனுடைய தரிசனத்தைக் கண்டான். அப்பொழுது யோவான், “செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தான்” பயந்து நடுங்கிய அந்த வேளையில், ஆறுதலையும், தைரியத்தையும் பெற்றுக்கொண்டு, எழுத ஆரம்பிக் கின்றான். “அவர் தம்முடைய வலது கரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;” (வச. 17) என்றெழுதினான்.

தேவன் நம்முடைய வசதியான வாழ்விலிருந்து நம்மை வெளியே எடுத்து, புதிய காரியங்களைக் காண்பிக்கின்றார், நம்மை வளைய வைத்து, வளரச் செய்கின்றார். நமக்கு தைரியத்தையும், ஆறுதலையும் தந்து எல்லா சூழ்நிலைகளின் வழியாகவும் கடந்து செல்லப் பண்ணுகின்றார். நம் சோதனைகளின் மத்தியில், நம்மை அவர் தனியே விடுவதில்லை. எல்லாவற்றையும் அவர் கட்டுப்படுத்துகின்றார், நம்மை அவருடைய கரங்களில் வைத்துள்ளார்.

 

இது நான் தான்

பி.டி.பார்னம் என்பவரின் வாழ்க்கையையும், அவருடைய சர்க்கஸ் அநுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட, பிரசித்திப் பெற்ற “த கிரேடெஸ்ட் ஷோ மன்” என்ற திரைப்படத்தின் முன் இசையாக, அனைவரையும் ஈர்க்கும் “திஸ் இஸ் மீ” என்ற, பாடல் மறக்கமுடியாத வகையில் இசைக்கப்படும். அந்த படத்தில் வரும் நடிகர்களால் இப்பாடல் பாடப்படும், இந்த நடிகர்கள், சமுதாயத்தின் விதிமுறைகளுக்கு இணங்கி செயல்படவில்லையென்பதற்காக, அவர்கள் சந்தித்த இகழ்ச்சிகளையும், கேவலங்களையும் விளக்குவதோடு, கொடிய வார்த்தைகள் மனிதனைக் கொல்லும் துப்பாக்கி குண்டுகளெனவும், நிரந்தர காயத்தை ஏற்படுத்தும் கத்திகள் எனவும் இந்த பாடலின் வரிகள் கூறுகின்றது. 

கடுஞ்சொற்களால் ஏற்பட்ட அகக்காயங்களை எத்தனை மக்கள் தாங்கிக் கொண்டு வாழ்கின்றனர் என்பதை இப்பாடல் தெரிவிக்கின்றது.

ஒருவருடைய வார்த்தைகள் ஏற்படுத்தும் காயத்தின் வன்மையையும், அது, நீண்ட காலம் நிலைத்திருக்கும் கொடுமையையும் யாக்கோபு அறிந்திருந்தார். எனவே நாவைக் குறித்து அது அடங்காத பொல்லாங்குள்ளதும், சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது (யாக். 3:8). என்கின்றார். இந்த வலிமையான ஒப்பிடுதலின் மூலம், விசுவாசிகள் தங்கள் வார்த்தைகளின் மிகுந்த வல்லமையை உணர்ந்துகொள்ள வேண்டுமென யாக்கோபு வலியுறுத்துகின்றார். இதற்கும் மேலாக, ஒரே வாயினாலே தேவனைத் துதித்துக் கொண்டும், தேவனுடைய சாயலாக படைக்கப்பட்ட மனிதனை தூஷிக்கவும் முற்படுகிறோம் என்கின்றார் (வச. 9-10).

“திஸ் இஸ் மீ” என்ற பாடல் வார்த்தைகளினால் காயப்படுத்துதலை விளக்குகிறது. நாம் மகிமைக்குரியவர்களென்பதாக வேதாகமம் உறுதியளிக்கின்றது. இந்த உண்மை ஒவ்வொரு மனிதனுக்கும், ஒரு தனி அழகையும், கெளரவத்தையும் கொடுக்கின்றது. அது நம்முடைய வெளித் தோற்றத்தினாலோ அல்லது நாம் எதையொ செய்துவிட்டதாலோ அல்ல. நாம் அவருடைய கரத்தினால் அழகாக உருவாக்கப்பட்டோம். நாம் அவருடைய கரத்தின் படைப்புகள் (சங். 139:14) எனவே நாம் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளும் வார்த்தைகளும், ஒருவரைப்பற்றி கூறும் வார்த்தைகளும் அவர்களில் உண்மையாகும் வல்லமை பெற்றவை.